மன்னார்குடி, அக்.4: தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மன்னார்குடி காந்திஜி சாலையில் உள்ள காதிகிராப்டில் காந்தி ஜெயந்தியையொட்டி காந்தியடிகள் படத்தை திறந்து வைத்த மாவட்ட கலெக்டர் ஆனந்த் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.இதுகுறித்து கலெக்டர் ஆனந்த் கூறுகையில், நடப்பாண்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.36 லட்சம் விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு ஏதுவாக கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி ஜரிகை பட்டு ரகங்கள், பாலியஸ்டர் கதர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புத்தம் புதிதாக வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.