மன்னார்குடி, அக். 4: மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசுக்கல்லூரியில் 10 நாட்களாக நடைபெற்று வந்த என்சிசி வருடாந்திர கூட்டு பயிற்சி முகாம் நிறைவடைந்தது.தமிழகத்தில் ஆண்டுதோறும் பல்வேறு அரசுக்கல்லூரிகளில் என்சிசி வீரர் களின் மாநில தழுவிய கூட்டு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரியில் வருடாந்திர என்சிசி கூட்டு பயிற்சி முகாம் கடந்த 24 ம் தேதி துவங்கியது.இம்முகாமில் டெல்டா மாவட்டங்களிலிருந்து 25 அரசு பள்ளி, 7 அரசு கல் லூரி களில் இருந்து சுமார் 500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி பெற்றனர். தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெற்ற முகாமில் துப்பாக்கி சுடுதல், எல்லைகள் மற்றும் வரைபடங்கள் கண்டு பிடித்தல், தனிநபர் ஒழுக்கம், தலைமை பண்பு, தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு, நீர் மேலாண்மை, நதிநீர் தூய்மை, பேரிடர் மீட்பு பணிகள் ஆகியவை குறித்து தலைசிறந்த என்சிசி பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு பயிற்சியளித்தனர்.