பள்ளி சாரணர் படை சார்பில் தென்னை மரக்கன்றுகள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, அக்.4: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்டம் மற்றும் காந்திஜி சாரணர் படை சார்பில் 150 தென்னை மரகன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்தார்.

உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணியன், திருத்துறைபூண்டி டவுன் லயன்ஸ் கிளப் தலைவர் முத்துக்குமரன், செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் மற்றும் மற்றும் ஆசிரியர்கள் 150 பேருக்கு தென்னை மரக்கன்றுகளை தலைமையாசிரியர் வழங்கினார். இதில் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், ஆசிரியர்கள் முகமது ரபீக், பாலசுப்ரமணியன், அக்பர்அலி, சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சக்கரபாணி நன்றி கூறினார்.

Related Stories: