திருவையாறு, அக். 4: திருவையாறு இருவேறு விபத்துகளில் பெண் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். திருவையாறு வெள்ளச்சி மண்டபம் மெயின்ரோட்டை சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி செல்வி (36). இவர் சம்பவத்தன்று வீடு அருகே மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் செல்வி படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் யோகராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.