கோவை, அக். 2: கோவை சூலூரில் இன்று காங்கிரஸ் பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், திரளாக பங்கேற்க மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் அழைப்பு விடுத்துள்ளார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்ைக:
மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் வழிகாட்டுதலின்படி, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்திய கொள்கைகளை வலியுறுத்தியும், அவரின் அகிம்சை குறித்த போதனையை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையிலும் பாதயாத்திரை நடைபெறுகிறது. சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சாமளாபுரத்தில் இன்று மாலை 4 மணியளவில் துவங்கும் இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் துவக்கிவைக்கிறார்.