ஈரோடு, அக். 2: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார்.ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்று ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் மற்றும் 17பி குற்றச்சாட்டு வழங்குவதையும் கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.