புதுக்கோட்டை, அக்.2: கிராம பஞ்சாயத்துகளுக்கு செய்யப்படும் வரவு செலவுகளை மத்திய அரசின் பொதுநிதி மேலாண்மை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் அனைத்து கிராம பஞ்சாயத்துகளின் வரவு செலவுகளை மத்திய நிதி அமைச்சகத்தின் மத்திய கணக்கு துணை இணைத்தின் வழியாக நேரடியாக கண்காணிக்க தொடங்கியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி செயலாளர்கள் பணியில் இருந்து வருகின்றனர். கிராம பஞ்சாயத்துகளை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 13 ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இரண்டு பிடிஓக்கள் மற்றும் துணை பிடிஓக்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் கிராம பஞ்சாயத்துகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தூய்மை பணி உள்ளிட்ட பணிகளை கண்காணிகப்பாளர்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் தனித்தனி பஞ்சாயத்து அலுவலகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஊராட்சி செயலாளர்கள் பணியில் இருப்பார்கள். இந்த பணியில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்கள். வரவு செலவு கணக்குகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிப்பார்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் தனித்தனியாக தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.