காரைக்கால், அக்.2: வரும் வெள்ளிக்கிழமை (4ம்தேதி) மாலை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காணொளி மூலம் மக்கள் குறைகளை கேட்கவுள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொளி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது.