பண்ருட்டி, அக். 1: பண்ருட்டி அருகே எல்.என்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர், திலகவதி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர். இதனை அறிந்த பிடிஓ ரவிச்சந்திரன், ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு சென்று தேங்கி நின்ற மழை நீரை அகற்றினர்.