சத்தியமங்கலம், அக். 1: தெருவோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நேற்று பு.புளியம்பட்டியில் நடந்தது. சத்தியமங்கலத்தில் தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பு.புளியம்பட்டி பஸ் நிலையம் முன் ஏ.ஐ.டி.யு.சி கவுரவத் தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவர் மாணிக்கராஜ், செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்பாட்டத்தில் தெருவோர வியாபாரிகள் சட்டம் 2014-ஐ முழுமையாக அமல்படுத்த கோரியும், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், வங்கி கடன் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.