திருமயம், அக்.1: திருமயம் அருகே போக்குவரத்துக்கு முற்றிலும் பயன்படுத்த முடியாத பனையப்பட் டி- கூடலூர் சாலையை உடனே சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டியில் இருந்து கூடலூர் வழியாகசெல்லும் சுமார் 8 கிலோ மீட்டர் சாலை திருமயம், பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சென்று பொன்னமராவதி நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த சாலையை மேலப்பனையூர், கூடலூர், பழுவினிப்பட்டி உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் சாலை செப்பணிட்டு பலஆண்டுகள் ஆனநிலையில் தொடர் பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் சேதமடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.