சீர்காழி, அக்.1: சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பாலித்தீன் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் வரவேற்றார். டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் ரஞ்சித்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.