வலங்கைமான், செப்.26: வலங்கைமான் பேரூராட்சி ஆறாவது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்காலிகமாக வாபஸ்பெறப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி ஆறாவது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மழைநீர் வெளியேறும் விதமாக வடிகால் வசதி செய்து தரவேண்டும். பேருந்து நிறுத்தம், அங்கன்வாடி கட்டிடம், புதிதாக தொகுப்பு வீடுகள் ஆகியவை கட்டித்தர வேண்டும், மயானத்ததிற்கு சுற்று சுவர் மற்றும், ஈமக்கிரியை மண்டபம் அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை (27ம் தேதி) சாலை மறியல் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.