பெரம்பலூர், செப். 25: பெரம்பலூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து கன்றுக்குட்டியை பிரசவிக்கும் நிலையில் கால்கள் வெளியே வந்த பசுமாட்டை கன்றோடு தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
பெரம்பலூர் அடுத்த வேலூர் கிராமம் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிப்பவர் வரதராஜ் (58). இவர் தனது மனைவி மற்றும் மகன் ரவி (36) உள்ளிட்டோருடன் காட்டிலேயே குடியிருந்தவாறு அவருக்கு சொந்தமான வயலில் விவசாயம் பார்த்து வருகிறார். தனது வயலில் மாடுகள், ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.இதில் ஒரு பசுமாடு சினை மாடாக இருந்தது. நேற்று முன்தினம் அந்த பசுமாடு புல் மேய்ந்து கொண்டிருந்தபோது வரதராஜூக்கு சொந்தமான வயல் கிணற்றில் தவறி விழுந்தது. 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. தண்ணீரில் விழுந்த அதிர்ச்சியில் வயிற்றிலிருந்த கன்றுக்குட்டியின் கால் வெளியே வந்தது.