பெரியகுளம், செப். 25: தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியில் வடுகபட்டியைச் சேர்ந்த உமாபதி தொழில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த செப்.5ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அவரை பாராட்டி வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.