முத்துப்பேட்டை, செப்.25: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு மஞ்சளங்காடு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.. இப்பகுதியில் அரசின் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் முழுமை பெறாமல் உள்ளது. இதில் தெருவிளக்கு வசதிகள் இருந்தும் எரிவது இல்லை. குடிநீர் வசதிகள் இருந்தும் இங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு, அதேபோல் சாலை வசதிகள் இருந்தும் அனைத்து சாலைகளுமே பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இந்நிலை இப்பகுதியில் உள்ள முக்கிய சாலையாக கருதுவது ரயில்வே கேட்டிலிருந்து பாமணி ஆறு ஓரத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலையானது சுமார் 2கிமீதூரம் உள்ள சாலையாகும். இது தற்பொழுது போதிய பராமரிப்பின்றி பல்லாங்குழியாய் மாறியுள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சாலையில் பலபகுதி ஆங்காங்கே பெயர்ந்து கருங்கல் ஜல்லிகள் சிதறி கிடக்கின்றன.