காரைக்கால், செப்.25: காரைக்கால் என்.ஐ.டி வளாகத்தில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு தேசிய கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.காரைக்கால் என்.ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு, இயக்குனர் சங்கரநாராயணசாமி தலைமை வகித்தார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு நிறுவனமான காலிகட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.பி. பிள்ளை கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.இக்கருத்தரங்கின் ஒரு அங்கமாக தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் சங்கரநாராயணசாமி, இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்துடன், தேசிய தொழில்நுட்ப கழக மாணவர் குழுமத்தை தொடங்கிவைத்தார்.