கோவில்பட்டி, செப். 24: கோவில்பட்டியில் மக்களுக்கு இடையூறாக இயங்கும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு எதிர்புறம் மெயின்ரோடு அருகிலும், அரசு மருத்துவமனை பகுதியிலும், கடலையூர் ரோடு அரசு மாணவர் விடுதி எதிர்புறமும், தங்கமயில் நகை கடைக்கு எதிர்புறமும் என 4 இடங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இவற்றால் அப்பகுதி மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளதால் உடனடியாக அகற்றக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.