கீழ்வேளூர், செப்.24:நாகை மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் ஈடுபடுத்த தன்னார்வலர்கள் 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் காவல் துறை இயக்குனர் வண்ணிப்பெருமாள் அறிவுரைப்படி நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும தன்னார்வர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரோந்து பணி தீவிரவாத காலங்களில் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணி மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு பணி, மேலும் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள அதி நவீன படகுகள் மற்றும் வாகனங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.