ஈரோடு, செப். 20: ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (32). இவர், நேற்று இவரது நண்பர் வரதராஜ் என்பவருடன் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பன்னீர் செல்வம் பார்க் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறி பயணித்தார். பஸ் பெரியமாரியம்மன் கோயில் வேகத்தடை அருகே மெதுவாக சென்றபோது, தர்மராஜ் பின்னால் நின்றிருந்த மர்மநபர் ஒருவர், தர்மராஜின் பாக்கெட்டில் இருந்து ரூ.200யை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓட முயன்றார்.