நெய்வேலி, செப். 20: குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ளது சித்தேரி. இந்த ஏரி 17 ஏக்கர் சுற்றளவு கொண்டது. அயன் குறிஞ்சிப்பாடி, வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களின் வாழ்வாதாரமாக இந்த சித்தேரி இருந்து வந்தது. தற்போது இந்த ஏரியில் ஆகாயதாமரை, முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளதால் ஏரியின் தண்ணீரை கிராமமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த சித்தேரி நீரை கடந்த பத்து வருடங்களுக்கு முன், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். அதுமட்டுமின்றி கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், இளைஞர்கள் உள்பட பலர் பயன்படுத்தி வந்தனர்.