ஆத்தூர், செப்.19: ஆத்தூர், தலைவாசல் பகுதியில் மக்காச்சோள பயிரில், படைப்புழு தாக்குதல் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் இருப்பதாக விவசாயிகள் வேளாண் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த கலெக்டர் ராமன் தலைமையிலான குழுவினர், மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலங்களை ஆய்வு செய்தார். அப்போது மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டால், மகசூல் பாதித்து விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படும். இதனை தவிர்க்க வேளாண் துறையின் மூலம் படை புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.