தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, கோலப்போட்டி

தா.பழூர், செப். 19: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு போஷன் அபியான் மற்றும் மகளிர் திட்ட குழுக்கள் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி மாவட்ட மகளிர் திட்ட மேலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.  மகளிர் திட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வை முன்னிட்டு மகளிர் திட்ட வளாகத்தில் கோலப்போட்டிகளும் நடைபெற்றது.  இதன் தொடர்ச்சியாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி குழு அமைப்பு தலைவர் காவேரி ,வட்டார மேலாளர் ராமலிங்கம், போஷன் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் ,திட்ட உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: