தக்கலை, செப்.17: கிள்ளியூரை சேர்ந்தவர் தங்கபாய்(53). இவர் குழித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது கணவர் செல்லத்தங்கம் உள்ளிட்டோர் மீது தனிநபர் வழக்கு தொடுத்திருந்தார். ஆனால் செல்லத்தங்கம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் நீதிபதி அவருக்கு பிடியாணை பிறப்பித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தக்கலை போலீசார் ெசல்லத்தங்கத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்லத்தங்கம் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.