மேச்சேரி, செப்.15: மேச்சேரி சாம்ராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(35). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவர், கடந்த 8 மாதத்திற்கு முன்பு தனது கடை முன்பு புல்லட்டை நிறுத்திச் சென்றார். மறுநாள் பார்த்தபோது வண்டியை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், மேச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று காலை, தொப்பூர் செக்போஸ்ட் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக புல்லட்டில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.