சேலம், செப்.15: வங்கிகள் இணைப்பை கண்டித்து, நாடாளுமன்றம் முன்பு வரும் 20ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார்.தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில், 23வது மாநில மாநாடு சேலத்தில் 2 நாட்கள் நடக்கிறது. நேற்று தொடங்கிய மாநாட்டில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் திருப்பி செலுத்தும் வசதி இருந்தும், திருப்பி செலுத்தப்படாமல் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய், கடன் தொகையை இதுவரை திருப்பி செலுத்தவில்லை.