ஈரோடு, செப். 11: கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுவதாக நெசவுத்தொழிலாளி நேற்று கலெக்டரிடம் புகார் அளித்தார். வெள்ளோடு சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் சென்னிமலையில் உள்ள காளிகோப் டெக்ஸ் கூட்டுறவு சங்கத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னிமலையில் உள்ள ஒரு பைனான்சில் குடும்ப தேவைக்காக ரூ.70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் அதே பைனாஸ்சில் ரூ.45 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கியதற்கு ஆதரமாக தனது வங்கி கணக்கு காசோலைகளை சுப்பிரமணியம் வழங்கினார். சில மாதங்கள் கடன் தொகையை கட்டி வந்த சுப்பிரமணியத்தினால் தொடர்ந்து திருப்பி செலுத்த முடியவில்லை.