கரூர், செப். 11: கரூர் அமராவதி ஆற்றில் ரூ.1 கோடி மதிப்பில் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணியினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.கரூர் திருமாநிலையூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே பழைய பாலதத்தை கரூர் வைஸ்யா வங்கி பங்களிப்புடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்காவுடன் கூடிய நடைபாதையாக அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காகவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் பழைய அமராவதி பாலத்தை சீரமைக்கப்பட்டு வருகிறது. பேவர் பிளாக் கற்கள் பதித்து, இரண்டு பகுதியிலும் பாதுகாப்புக்காக உயரிய கம்பிகள் பொருத்தப்பட உள்ளது. நடுவில் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.