திருப்புவனம் புதூரில் கல்லூரி மாணவர் மாயம்

திருப்புவனம், செப். 10:  திருப்புவனம் புதூர் செட்டிய தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அஜீத் குமார் (19). திருச்சி தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுமுறையில் இருந்தார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் மகனுக்கு மருத்துவ விடுப்பு வாங்குவது தொடர்பாக திருப்புவனம் சந்தை திடலுக்கு இருவரும் வந்தனர். அப்போது அஜீத்குமார் வீட்டு செல்வதாக கூறி சென்றார். ஆனால் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து பார்த்த போது அஜீத்குமார் இல்லை.   புகாரின்பேரில் திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: