ஈரோடு, செப். 10: கோபி அடுத்துள்ள சிறுவலூர் ஊராட்சி குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (61). மாற்றுத்திறனாளியான இவரது மகன் நாகராஜ் (29). இவர், நம்பியூர் வெள்ளாளபாளையத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் போர்வெல் லாரிக்கு வேலைக்கு சென்றார். அப்போது கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தானுக்கு போர்வெல் லாரியுடன் சென்ற நாகராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து தந்தை சண்முகம் போர்வெல் லாரி உரிமையாளர்களிடம் பல முறை கேட்டும் முறையாக பதிலளிக்கவில்லை.