அந்தியூர், செப்.10: பர்கூர் மலைப்பகுதிக்கு அந்தியூரில் இருந்து வரட்டுப்பள்ளம் வழியாக 23 கி.மீ கொண்ட மலைப்பாதை சாலையில் தினமும் 100க்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இச்சாலையின் ஓரத்தில் ஒரு சில இடத்தில் மட்டும் தடுப்பு கம்பிகள் இரண்டு அடி உயரத்தில் நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அதிக வளைவு கொண்ட பகுதிகளில் தடுப்பு கம்பிகள் கிடையாது. அப்போது சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் வரும் போது அந்த பகுதியை கடப்பதற்காக மலைப்பாதையின் ஓரம் வரை சென்று மற்ற வாகனத்திற்கு வழிவிட வேண்டிய நிலையுள்ளது.