கந்தர்வகோட்டை, செப்.10: ஆதனக்கோட்டையில் குப்பைகளை சாலையின் ஓரத்தில் எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். எனவே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் தற்போது அதிகாரிகளின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன. ஊராட்சி தலைவர்கள் என்றால் தினந்தோறும் சென்று பல இடங்களில் கண்காணித்து பணிகளை மேற்கொள்வர் தற்போது அதிகாரிகளுக்கு கூடுதலாக கண்காணிக்கும் பணி இருப்பதால் சம்பவ இடங்களுக்கு நேரிடையாக செல்லும் நிலை இல்லை.