இன்றைய நிகழ்ச்சிகள் நாகை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சிறப்பு கூட்டம்

மயிலாடுதுறை, செப்.10: நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சிறப்பு கூட்டம் மயிலாடுதுறையில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர். துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மூவலூர்மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ சத்தியசீலன் மற்றும் ஏராளமான இளைஞரணி அமைப்பினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

Related Stories: