சீர்காழி, செப்.10: சீர்காழி அருகே சூரக்காட்டில் தகவல் பலகை இல்லாததால் நவக்கிரக கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இதேபோல் நாங்கூரை சுற்றி 108 வைணவத் தலங்களில் 11 கோயில்கள் அமைந்துள்ளன. இதேபோல் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நவகிரகங்களில் ஒன்றான கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.