தா.பழூர், ஆக. 22: சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு வருமானம் தரும் வேளாண் காடுகள் மற்றும் மரம் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையம் சோழமாதேவியில் வருமானம் தரும் வேளாண் காடுகள் மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய பயற்சி நடந்தது. மைய வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா வரவேற்றார். மையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் பேசினார். அதில் வேளாண் அறிவியல் மைய செயல்பாடு மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பதன் மூலம் எவ்வாறு வருமானம் பெறலாம். இதனால் விவசாயிகள் மலர் சாகுபடி மூலம் நாள் வருமானமும், காய்கறி சாகுபடி மூலம் வார வருமானமும், வேளாண் பயிர்கள் மூலம் மாத வருமானமும், வேளாண் காடுகள் வளர்ப்பதன் மூலம் ஆண்டு வருமானம் பெறலாம் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.