கூடலூர், ஆக.20: மலைமாடுகளுக்கு வனஉரிமை சட்டப்படி மேய்ச்சலுக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கிட கோரி, கூடலூரில் நுற்றுக்கணக்கான மாடுகளுடன் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழு அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மலைமாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மலை மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே வனத்துறை அனுமதி உள்ளது. இந்த ஆண்டு மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும், மலைமாடுகளுக்கான இலவச அனுமதி சீட்டு வழங்கவும் மேகமலை வனஉயிரின சரணாலய அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து மலைமாடு வளர்ப்போர் சங்கத்தினர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தீர்வு எட்டாததால், நேற்று திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் பெட்ரோல் பங்க் அருகே விவசாயிகள் நூற்றுக்கணக்கான மாடுகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.கூடலூர் விவசாய சங்க செயலாளர் ராமர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினர். உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு, கூடலூர் இன்ஸ்பெக்டர்