கும்பகோணம், ஆக. 20: கொள்ளிடத்தில் தனி மணல் குவாரி அமைக்ககோரி கும்பகோணத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கொள்ளிடம் ஆற்றில் தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகம் முன் தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். தலைவர்கள் முருகன், லட்சுமணன், செயலாளர்கள் பாஸ்கர், செந்தில், பொருளாளர் முருகன், உலகநாதன் முன்னிலை வகித்தனர்.