முச்சந்தியம்மன் கோயில் திருவிழா

நீடாமங்கலம்,ஆக.20: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் உள்ள சிறப்பு பெற்ற முச்சந்தியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பக்தர்கள் வேண்டுதலின் பேரில் சக்தி கரகம், பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.மதியம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் அன்னதானம் வழங்கும் சிகழ்ச்சியும் நடந்தது.மாலைஅம்பாளு க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இரவு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: