நாமக்கல், ஆக.14: நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல்லில் தேசிய கொடி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கொடியினை வாங்கிச் செல்கின்றனர். நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. நாமக்கல்லில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. சுதந்திர தினத்தன்று பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழச்சிகள் நடைபெற உள்ளது. அதே போல் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.