புதுக்கோட்டை, ஆக.14: நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆலங்குடியை சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர் 515 கணேசன் (68). சமூக சேவகரான இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக கட்டணம் வசூலிக்காமல் 6 ஆயிரம் சடலங்களை ஏற்றிச் சென்றுள்ளார்.515 கணேசன் என்றால் தமிழகத்தில் அனைத்து சமூக அமைப்புகளுக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்டோர், கடலூரில் தானே புயலில் பாதிக்கப்பட்டோர், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் நாகை, புதுகை மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து எடுத்து சென்று வழங்கியுள்ளார்.