குடிப்பதை கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

திருப்புத்தூர், ஜூலை 24: திருப்புத்தூர் அருகே அரளிககோட்டை பகுதியில் கொட்டகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை அருகே மதகுபட்டி-கல்லல் ரோட்டு பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி(55). இவர் கொட்டகை போடும் தொழில் செய்து வருகிறார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு பணம் ஏதும் கொடுக்காமல் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இவரது மனைவி நாச்சம்மாள் திட்டியாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மலைச்சாமி திருப்புத்தூர் அருகே அரளிக்கோட்டை காட்டுப்பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அப்பகுதியினர் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் காவல்நிலைய எஸ்.ஐ. முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: