விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சேலம், ஜூலை 23: சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் 26ம் தேதி நடக்கிறது.சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாதந்தோறும், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்டம் முழுவதிலும் இருந்து வரும் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை தெரிவிப்பார்கள். அதன்படி, நடப்பு மாதத்திற்கான குறைதீர் கூட்டம், வரும் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. எனவே சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது வேளாண்மை சார்ந்த கோரிக்கைகளை நேரிலும், மனுக்கள் மூலமாகவும் தெரியப்படுத்தலாம் என கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: