சாராயம் விற்ற 2 பேர் கைது

புவனகிரி, ஜூலை 23:  பரங்கிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பல்வேறு கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியகுமட்டி பஸ் நிலையம் அருகில் சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரியகோஷ்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் (47) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த 5 லிட்டர் சாராயத்தை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர். இதுபோல் அகரம் வானவர் குளம் அருகில் சாராயம் வைத்திருந்ததாக அகரம் புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்தும் 5 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: