கும்பகோணம், ஜூலை 23: கும்பகோணம் நகராட்சி சார்பில் மகாமக குளம் அருகில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை நகராட்சி ஆணையர் (பொ) ஜெகதீசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நகர்நல அலுவலர் பிரேமா, நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று மழைநீரை சேகரிப்போம், நிலத்தடி நீரை காப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கும்பகோணத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி பூங்கா அருகே பேரணி முடிவடைந்தது. இதில் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.