வேதாரண்யம், ஜூலை 19: வேதாரண்யம் பகுதியில் இடிமின்னலுடன் நள்ளிரளில் கனமழை வெளுத்து வாங்கியதால் மின்சாரம் தடைபட்டது.
வேதாரண்யம் பகுதியில் கஜா புயலுக்கு பிறகு மழை என்பதே அரிதாக உள்ளது. இதனால் நீர்மட்டம் குறைந்து கடும் வறட்சி நிலவுகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக நீடிப்பதால் கோடையைபோல் வெப்பம் மக்களை சுட்டெரித்து வருகிறது. இதனால் பகலில் மக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் 3 தினங்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது. ஆனால் நாகை மாட்டத்தில் மட்டும் மழையே பெய்யாமல் வரட்சி தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேதாரண்த்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ந்தது. இந்த மழை வேதாரண்யம், கரும்பம்புலம், ஆயக்காரன்புலம் தகட்டூர் மற்றும் தென்னடார் வரை நிடித்தது.