சீர்காழி, ஜூலை 18: சீர்காழி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் தலைமை வகித்தார். சீர்காழி கட்டிட பொறியாளர் சங்க முன்னாள் தலைவர்கள் சுப்ரமணியன், செல்வகுமார், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க தலைவர் பழனியப்பன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் அஜிதா பிரவின் மழைநீர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி மழைநீரின் சேமிப்பு குறித்து விளக்கினார்.