மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் சண்டிஹோமம்

கொள்ளிடம், ஜூலை 18: கொள்ளிடம்அருகே மாதானம் முத்துமாரியம்மன்கோயிலில் மழைபெய்யவேண்டி மகா சண்டி ஹோமம் நடந்தது.

மாதானத்தில் பிரசித்திப்பெற்ற முத்துமாரியம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலில் மழைபெய்து, விவசாயம் செழிக்க சண்டிஹோமம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் யாகசாலையில் பல்வேறு மூலிகைப் பொருட்கள் இட்டு சிறப்பு சண்டி ஹோமம் செய்யப்பட்டு, பூர்ணாஹூதி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கோயில் அறங்காவலர் நடராஜன் செய்திருந்தார்.

Related Stories: