உரங்கள் விலை குறைப்பு

கடலூர், ஜூலை 18: டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மண்டல  கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனமான இப்கோ நிறுவனம், குறுவை மற்றும் சம்பா பயிர் சாகுபடிக்காக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி டிஏபி உரம் ஒரு மூட்டை விலை ரூ.1,450 லிருந்து ரூ.1,300 ஆகவும், இப்கோ 20:20:0:13 காம்ப்ளக்ஸ் உரம் ஒரு மூட்டை விலை ரூ.1,365 லிருந்து ரூ.1,250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி விலை குறைப்பு சலுகையுடன் உரங்களை வாங்கி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: