காரைக்கால், ஜூலை16: இந்து கோயில்களிலிருந்து அரசாங்கத்தை வெளியேறக் கோரி, காரைக்காலில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்து கோயில்களிலிருந்து அரசாங்கத்தை வெளியேறக் கோரி, நாடு முழுவதும் இந்து முன்னணி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பழைய ரயில் நிலையம் அருகே, மாவட்ட இந்து முன்னணி சார்பில், அதன் துணைத் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சிறப்புரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அருள் முருகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறையின் சீர்கேடுகளையும் டெம்பிள் சிட்டி என்ற பெயரில் திருநள்ளாற்றில் கோயில் பணம் வீணடிக்கப்படுவதையும் எடுத்துக் கூறினார்.