நாமக்கல், ஜூன் 27: நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோயிலின் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில் ₹17.98 லட்சம் ரொக்கம், 37 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள், 3 மாதத்துக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில், ஆஞ்சநேயர் கோயில் மற்றும் நரசிம்மர் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.